Barathiyar


Papanasam Sivan


  Kalki


    Rajaji


   Kannadhasan


     Valee


    Karunanithi


  Vairamuthu


  Gangai Amaran


   T.Rajendhar


   Mu.Metha


   Pa.Vijay


 Na.Muthu Kumar


   Yugabarathi


 Thamarai

 

 
 

உளுந்தூர்ப்பேட்டை சண்முகம் எம்.ஏ.,
எம்.லிட்., பி.எச்.டி.,

ஒரு சிறு குறிப்பு

பிறந்த தேதி

16.09.1932

பிறந்த  இடம்

உளுந்தூர்பேட்டை

இறப்பு நாள்

24.08.2003

இறந்த இடம்

சென்னை

வகுப்பு

பிற்படுத்தப்பட்ட வகுப்பு

இனம்

தமிழினம்

முகவரி

பழைய எண்.5, புதிய எண்.11,
முதல் பிரதான சாலை, சி.ஐ.டி.நகர்,                              சென்னை - 600 035.
 

தொலைபேசி எண்கள்

2243 2482, 93810 56388

கல்வித் தொகுதி :

முதுகலை பட்டம் (எம்.ஏ.) : தமிழ் மொழி மற்றும் இலக்கியம்   முதல் வகுப்பு - 1960 பச்சையப்பன் கல்லூரி   சென்னை.

 
எம்.லிட் : நற்றிணை - ஓர் இலக்கிய ஆய்வு, அண்ணாமலைப் பல்கலைக்கழகம் - 1971.

 முனைவர் பட்டம் (பி.எச்.டி.) :  "தமிழ் நாவல்களின் தோற்றமும் எழுச்சியும்" அண்ணாமலைப் பல்கலைக்கழகம் - 1978.

ஆற்றியப் பணிகள் :

1) ஆசிரியராக :     விரிவுரையாளர் மற்றும் ஆராய்ச்சி உதவியாளர் - தமிழ்த்துறை அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர் - 1960 ... 72.

  பேராசிரியர் மற்றும் துறைத் தலைவர் "தமிழ்த்துறை" ....  S.I.V.E.T. கல்லூரி, சென்னை - 1972 - 74.

2) அரசு நிர்வாகியாக உதவி இயக்குனர் - மொழிபெயர்ப்புத்துறை  தலைமைச் செயலகம் - தமிழ்நாடு அரசு 1975 - 78.

இயக்குனர் - தமிழ்ப் பண்பாட்டு மையம்   தலைமைச் செயலகம் - தமிழ்நாடு அரசு 1978 - 81.

3) கவிஞனாக : தமிழ்நாட்டின் தன்னிகரற்ற கவிஞர்,  உலகளாவிய புகழ் கொண்டவர். சமுதாயம், சான்றோர் தமிழ்மொழி, நாடு, தமிழ் இலக்கியம் போன்ற பல தலைப்புகளில் தமிழில் கவிதைகள் மற்றும் பக்திப் பாடல்கள் ஏறத்தாழ 3000 (மூவாயிரம்) பாடல்கள் அவரால் இயற்றப்பட்டு, ஒலிப்பேழைகளாகவும், குறுந்தகடுகளாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

4) தேசப்பற்றுடையவராக : தேச ஒற்றுமைக்காக பல பாடல்களை இயற்றியுள்ளார். அவை வானொலி நிலையங்களில் ஒலிபரப்பப்ட்டுள்ளன. தொலைக்காட்சி நிலையத்திலும் ஒளிபரப்பப்பட்டுள்ளன. தேசப்பற்று பாடல்களின் தொகுப்பான "செக்கர்வானம்" என்ற புத்தகத்தை இந்திய அரசு நூலாக வெளியிட்டுள்ளது.

5) கலைஞனாக :  புகழ்பெற்ற பாடல்கள் பல தமிழ் திரைப்படங்களுக்கும், நாட்டிய நாடகங்களுக்கும் இயற்றியுள்ளார்.

6) பேச்சாளராக : பல கவியரங்கங்களிலும், பட்டிமன்றங்களிலும் பங்கேற்றுள்ளார். வானொலி மற்றும் தொலைக்காட்சியில் சொற்பொழிவுகள் நிகழ்த்தியுள்ளார்.

7) எழுத்தாளனாக : அவர் எழுதிய கட்டுரைகள் மற்றும் சிறுகதைகள் பத்திரைகள் பத்திரிக்கைகளில் வெளிவந்துள்ளன.

8) வெளியிட்டுள்ள நூல்கள் :

1) இசைமாலை - பக்திபாடல்கள் - 1961

2) எங்கே சென்றாய் - தாகூர்ஷெல்லியின் கருத்துப் பாடல்கள் - 1961

3) பொங்குபுனல் - சமுதாயப்பாடல்கள் - 1964

4) வளரும் பயிர் - குழந்தைப்பாடல்கள் - 1964

5) இன்பத்தீ - காதல்பாடல்கள் - 1965

6) சாரல் - புதுக்கவிதைத் தொகுப்பு

7) கங்குல்வெள்ளம் - முத்திரைப்பாடல்கள் - 1968

8) பாதமலர்கள் - பக்திப்பாடல்கள் - 1970

9) செக்கவர்வானம் - தேசப்பற்றுப்பாடல்கள் - 1971

10) தேசபக்தி பாடல்கள்

11)அன்னையடாஅன்னை நாட்டிய நாடகம் - 1971

12) ஞான ஊற்று - ஞானசம்பந்த பாடல்கள் - 1972

13) பொன்மாரிபொழிக - கனகதார ஸ்தோத்திரம் தமிழ்மொழிபெயர்ப்பு

14) ஸ்ரீ வெங்கடேச சுப்ரபாதம் தமிழ்மொழிபெயர்ப்பு

15) ஸ்ரீ மஹிஷாசுரமர்த்தினி - தமிழ்மொரிபெயர்ப்பு

9) மொழிப்பெயர்ப்பாளராக : சமஸ்கிருதத்திலிருந்து தமிழில் மொழி பெயர்த்தவைகள்...

1) தேவி மஹாத்மியம் - ஓர் நாட்டிய நாடகம்

2) ஸ்ரீ வெங்கடேச சுப்ரபாதம் - திருமதி பாம்பே சகொதரிகளால் பாடப்பெற்று, பத்து லட்சம் ஒலிப்பேழைகளுக்குமேல் வெளியிடப்பட்ட்து.

3) ஸ்ரீ சுப்ரமண்ய புஜங்கம் - ஆதிசங்கரர்

4) கனகதாரா ஸ்தோதிரம் - ஆதிசங்கரர்

5) விஷ்ணு சகஸ்ரநாமம்

6) பஜகோவிந்தம்

7) ஆதித்ய ஹ்ருதயம்

8) லட்சுமி நரசிம்ம கரவலமபம்

9) ஸ்ரீ மஹா கணபதி சகஸ்ரநாமம்

10) ஸ்ரீ சாஸ்தா சகஸ்ரநாம்ம்

11) திரிசதி

12) ஸ்ரீ ஸ்துதி

13) சிவ ஸ்தோத்திரங்கள்

14) ஸ்ரீ துர்கா ஸ்தோத்திரங்கள்

15) ஸ்ரீ ஸ்கந்தலஹரி

16) செள்ந்தர்யலஹரி

17) ஸ்ரீ ஹனுமன் சாலிஸா

18) ஸ்ரீ மஹிஷாசுரமர்த்தினி ஸ்தோத்திரம்

19) மகாலட்சுமி ஸ்தோத்திரங்கள்

20) ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஸ்தோதிரங்கள்

21) ஸ்ரீ துர்கா ஸ்கஸ்ரநாமம் மற்றும் பல

10) குழந்தைக் கவிஞனாக :

1) வளரும் பயிர் - பாடல்கள் நர்சரி ரைம்ஸ் திருமதி. லதா ரஜினிகாந்த் பாடியுள்ளார்.

3) கண்மணி பூங்கா - நர்சரி ரைம்ஸ் திருமதி. சந்தியா ராஜகோபால் பாடியுள்ளார்.

விருதுகள் :

1) பக்த சிகாமணி - 1971 - சென்னை   (Spiritual Study Circle)

2) இசைக்கவி அரசு - 1972   பாவலர் மன்றம் - திருப்பனந்தாள் தஞ்சாவூர் மாவட்டம்

3) கலைமாமணி - 1975 தமிழ்நாடு அரசு - சென்னை

4) அருட்செல்வர் - 1984  உலக சமுதாய மையம் - சென்னை (The World Community Center)

5) தெய்வீக கவிஞர்  -  1989  ஸ்ரீ லட்சுமி நாரயணா க்ரூப் ஆஃப் கம்பெனிஸ், சென்னை.

6) பெருங்கவிஞர் - திருவல்லிக்கேனி முருகனடியார் சங்கம்.

More Lyricists

 

Feedback Contact Us Home