|
3.
நீத்தார் பெருமை - திருக்குறள்
|
|
| 1. |
ஒழுக்கத்து
நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு. |
 |
|
2. |
துறந்தார்
பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று. |
 |
|
3. |
இருமை
வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று உலகு. |
 |
|
4. |
உரன்என்னும்
தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
வரன்என்னும் வைப்பிற்குஓர் வித்து. |
 |
|
5. |
ஐந்துஅவித்தான்
ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலும் கரி. |
 |
|
6. |
செயற்கரிய
செய்வார் பெரியர்; சிறியர்
செயற்கரிய செய்கலா தார் |
 |
|
7. |
சுவைஔத ஊறுஓசை
நாற்றமென்று ஐந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு. |
 |
|
8. |
நிறைமொழி
மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும். |
 |
|
9. |
குணமென்னும்
குன்றுஏறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது. |
 |
|
10. |
அந்தணர் என்போர்
அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான். |
 |
|
|
திருக்குறள்
- தொகுப்பு |