|
5.
இல்வாழ்க்கை -
திருக்குறள்
|
|
| 1. |
இல்வாழ்வான்
என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை. |
 |
|
2. |
துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும்
இறந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை. |
 |
|
3. |
தென்புலத்தார்
தெய்வம் விருந்தொக்கல் தான்என்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை. |
 |
|
4. |
பழியஞ்சிப்
பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல். |
 |
|
5. |
அன்பும் அறனும்
உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது. |
 |
|
6. |
அறத்தாற்றின்
இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றின்
போஒய்ப் பெறுவது எவன்? |
 |
|
7. |
இயல்பினான்
இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள் எல்லாம் தலை. |
 |
|
8. |
ஆற்றின்
ஒழுக்கி அறன்இழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து. |
 |
|
9. |
அறனெனப் பட்டதே
இல்வாழ்க்கை அஃதும்
பிறன்பழிப்பது இல்லாயின் நன்று. |
 |
|
10. |
வையத்துள்
வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
தெய்வத்துள் வைக்கப் படும். |
 |
|
|
திருக்குறள்
- தொகுப்பு |