|
7. மக்கட்பேறு -
திருக்குறள்
|
|
| 1. |
பெறுமவற்றுள்
யாம்அறிவது இல்லை அறிவுஅறிந்த
மக்கட்பேறு அல்ல பிற. |
 |
|
2. |
எழுபிறப்பும்
தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கள் பெறின். |
 |
|
3. |
தம்பொருள்
என்பதம் மக்கள்; அவர்பொருள்
தம்தம் வினையான் வரும். |
 |
|
4. |
அமிழ்தினும்
ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ். |
 |
|
5. |
மக்கள்மெய்
தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர்
சொல்கேட்டல் இன்பம் செவிக்கு. |
 |
|
6. |
குழல்இனிது
யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர். |
 |
|
7. |
தந்தை
மகற்குஆற்றும் நன்றி அவையத்து
முந்தி யிருப்பச் செயல். |
 |
|
8. |
தம்மின்தம்
மக்கள் அறிவுடமை மாநிலத்து
மன்னுயிர்க்கு எல்லாம் இனிது. |
 |
|
9. |
ஈன்ற பொழுதின்
பெரிதுஉவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய். |
 |
|
10. |
மகன்தந்தைக்கு
ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல். |
 |
|
|
திருக்குறள்
- தொகுப்பு |