|
9.
விருந்தோம்பல்
- திருக்குறள்
|
|
| 1. |
இருந்துஓம்பி
இல்வாழ்வது எல்லாம் விருந்துஓம்பி
வேளாண்மை செய்தல் பொருட்டு. |
 |
|
2. |
விருந்து
புறத்ததாத் தான்உண்டல் சாவா
மருந்துஎனினும் வேண்டற்பாற் றன்று. |
 |
|
3. |
வருவிருந்து
வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
பருவந்து பாழ்படுதல் இன்று. |
 |
|
4. |
அகன்அமர்ந்து
செய்யாள் உறையும் முகன்அமர்ந்து
நல்விருந்து ஓம்புவான் இல். |
 |
|
5. |
வித்தும்
இடல்வேண்டும் கொல்லோ விருந்துஓம்பி
மிச்சில் மிசைவான் புலம்? |
 |
|
6. |
செல்விருந்து
ஓம்பி வருவிருந்து பார்த்துஇருப்பான்
நல்விருந்து வானத் தவர்க்கு. |
 |
|
7. |
இணைத்துணைத்து
என்பதொன்று இல்லை: விருந்தின்
துணைத்துணை வேள்விப் பயன். |
 |
|
8. |
பரிந்துஓம்பிப்
பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி
வேள்வி தலைப்படா தார். |
 |
|
9. |
உடமையுள் இன்மை
விருந்தோம்பல் ஓம்பா
மடமை: மடவார்கண் உண்டு. |
 |
|
10. |
மோப்பக்
குழையும் அனிச்சம் முகம்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து. |
 |
|
|
திருக்குறள்
- தொகுப்பு |