Thirukkural
13. அடக்கமுடைமை  -  திருக்குறள்  
1. அடக்கம் அமரருள் உய்க்கும்: அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்.
2. காக்க பொருளா அடக்கத்தை: ஆக்கம்
அதனின்ஊஉங்கு இல்லை உயிர்க்கு.
3. செறிவுஅறிந்து சீர்மை பயக்கும் அறிவுஅறிந்து
ஆற்றின் அடங்கப் பெறின்.
4. நிலையில் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது.
5. எல்லார்க்கும் நன்றுஆம் பணிதல்: அவருள்ளும்
செல்வர்க்கே செல்வந் தகைத்து.
6. ஒருமையுள் ஆமைபோல் ஐந்துஅடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப்பு உடைத்து.
7. யாகாவார் ஆயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.
8. ஒன்றானும் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்
நன்றுஆகா தாகி விடும்.
9. தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு.
10. கதம்காத்துக் கற்றுஅடங்கல் ஆற்றுவான் செவ்வி
அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து.
  திருக்குறள் - தொகுப்பு