|
14.
ஒழுக்கமுடைமை
- திருக்குறள்
|
|
| 1. |
ஒழுக்கம்
விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும். |
 |
|
2. |
பரிந்துஓம்பிக்
காக்க ஒழுக்கம் தெரிந்துஓம்பித்
தேரினும் அஃதே துணை. |
 |
|
3. |
ஒழுக்கம் உடமை
குடிமை: இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும். |
 |
|
4. |
மறப்பினும்
ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கம் குன்றக் கெடும். |
 |
|
5. |
அழுக்காறு
உடையான்கண் ஆக்கம்போன்று இல்லை
ஒழுக்கம் இலான்கண் உயர்வு. |
 |
|
6. |
ஒழுக்கத்தின்
ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்
ஏதம் படுபாக்கு அறிந்து. |
 |
|
7. |
ஒழுக்கத்தின்
எய்துவர் மேன்மை: இழுக்கத்தின்
எய்துவர் எய்தாப் பழி. |
 |
|
8. |
நன்றிக்கு
வித்தாகும் நல்லொழுக்கம்: தீயொழுக்கம்
என்றும் இடும்பை தரும். |
 |
|
9. |
ஒழுக்க
முடையவர்க்கு ஒல்லாவே தீய
வழுக்கியும் வாயால் சொலல். |
 |
|
10. |
உலகத்தோடு ஒட்ட
ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார். |
 |
|
|
திருக்குறள்
- தொகுப்பு |