Thirukkural
15. பிறனில் விழையாமை திருக்குறள்  
1. பிறன்பொருளாள் பெட்டுஒழுகும் பேதைமை ஞாலத்து
அறம்பொருள் கண்டார்கண் இல்.
2. அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை
நின்றாரின் பேதையார் இல்.
3. விளிந்தாரின் வேறுஅல்லர் மன்ற தௌதந்தாரில்
தீமை புரிந்துஒழுகு வார்.
4. எனைத்துணையர் ஆயினும் என்ஆம்? தினைத்துணையும்
தேரான் பிறனில் புகல்.
5. எளிதுஎன இல்லிறப்பான் எய்தும்எஞ் ஞான்றும்
விளியாது நிற்கும் பழி.
6. பகைபாவம் அச்சம் பழியென நான்கும்
இகவாவாம் இல்இறப்பான் கண்.
7. அறனியலான் இல்வாழ்வான் என்பான் பிறனியலான்
பெண்மை நயவா தவன்.
8. பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
அறனொன்றோ ஆன்ற ஒழுக்கு.
9. நலக்குஉரியார் யாரெனின் நாமநீர் வைப்பின்
பிறற்குஉரியாள் தோள்தோயா தார்.
10. அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையாள்
பெண்மை நயவாமை நன்று.
  திருக்குறள் - தொகுப்பு