Thirukkural
16. பொறையுடைமை திருக்குறள்  
1. அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை.
2. பொறுத்தல் இறப்பினை என்றும்: அதனை
மறத்தல் அதனினும் நன்று.
3. இன்மையுள் இன்மை விருந்தொரால் வன்மையுள்
வன்மை மடவார்ப் பொறை.
4. நிறையுடமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை
போற்றி ஒழுகப் படும்.
5. ஒறுத்தாரை ஒன்றாக வையாரே: வைப்பர்
பொறுத்தாரைப் பொன்போல் பொதிந்து.
6. ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்
பொன்றும் துணையும் புகழ்.
7. திறன்அல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து
அறன்அல்ல செய்யாமை நன்று.
8. மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாம்தம்
தகுதியான் வென்று விடல்.
9. துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய்
இன்னாச்சொல் நோற்கிற் பவர்.
10. உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்
இன்னாச்சொல் நோற்பாரின் பின்.
  திருக்குறள் - தொகுப்பு