|
18.
வெஃகாமை - திருக்குறள்
|
|
| 1. |
நடுவுஇன்றி
நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக்
குற்றமும் ஆங்கே தரும். |
 |
|
2. |
படுபயன் வெஃகிப்
பழிப்படுவ செய்யார்
நடுவன்மை நாணு பவர். |
 |
|
3. |
சிற்றின்பம்
வெஃகி அறன்அல்ல செய்யாரே
மற்றுஇன்பம் வேண்டு பவர். |
 |
|
4. |
இலம்என்று
வெஃகுதல் செய்யார் புலம்வென்ற
புன்மையில் காட்சி யவர். |
 |
|
5. |
அஃகி அகன்ற
அறிவுஎன்னாம் யார்மாட்டும்
வெஃகி வெறிய செயின். |
 |
|
6. |
அருள்வெஃகி
ஆற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப்
பொல்லாத சூழக் கெடும். |
 |
|
7. |
வேண்டற்க
வெஃகிஆம் ஆக்கம்: விளைவயின்
மாண்டற்கு அரிதாம் பயன். |
 |
|
8. |
அஃகாமை
செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை
வேண்டும் பிறன்கைப் பொருள். |
 |
|
9. |
அறன்அறிந்து
வெஃகா அறிவுடையார்ச் சேரும்
திறன்அறிந்து ஆங்கே திரு. |
 |
|
10. |
இறல்ஈனும்
எண்ணாது வெஃகின் விறல்ஈனும்
வேண்டாமை என்னுஞ் செருக்கு. |
 |
|
|
திருக்குறள்
- தொகுப்பு |