Thirukkural
20. பயனில சொல்லாமைதிருக்குறள்  
1. பல்லார் முனியப் பயன்இல சொல்லுவான்
எல்லாரும் எள்ளப் படும்.
2. பயன்இல பல்லார்முன் சொல்லல் நயன்இல
நட்டார்கண் செய்தலின் தீது.
3. நயன்இலன் என்பது சொல்லும் பயன்இல
பாரித்து உரைக்கும் உரை.
4. நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப்
பண்பில்சொல் பல்லா ரகத்து.
5. சீர்மை சிறப்பொடு நீங்கும் பயன்இல
நீர்மை யுடையார் சொலின்.
6. பயன்இல்சொல் பாராட்டு வானை மகன்எனல்
மக்கட் பதடி எனல்.
7. நயன்இல சொல்லினும் சொல்லுக சான்றோர்
பயன்இல சொல்லாமை நன்று.
8. அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்
பெரும்பயன் இல்லாத சொல்.
9. பொருள்தீர்ந்த பொச்சாந்தும் சொல்லார் மருள்தீர்ந்த
மாசறு காட்சி யவர்.
10. சொல்லுக சொல்லின் பயனுடைய சொல்லற்க
சொல்லில் பயனிலாச் சொல்.
  திருக்குறள் - தொகுப்பு