Thirukkural
21. தீவினையச்சம் திருக்குறள்  
1. தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்
தீவினை என்னும் செருக்கு.
2. தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்.
3. அறிவினுள் எல்லாந் தலையென்ப தீய
செறுவார்க்கும் செய்யா விடல்.
4. மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
5. இலன்என்று தீயவை செய்யற்க: செய்யின்
இலன்ஆகும் மற்றும் பெயர்த்து.
6. தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால
தன்னை அடல்வேண்டா தான்.
7. எனைப்பகை உற்றாரும் உய்வர் வினைப்பகை
வீயாது பின்சென்று அடும்.
8. தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை
வீயாது அடிஉறைந் தற்று.
9. தன்னைத்தான் காதலன் ஆயின் எனைத்தொன்றும்
துன்னற்க தீவினைப் பால்.
10. அருங்கேடன் என்பது அறிக மருங்கோடித்
தீவினை செய்யான் எனின்.
  திருக்குறள் - தொகுப்பு