|
22.
ஒப்புரவறிதல் -
திருக்குறள்
|
|
| 1. |
கைம்மாறு வேண்டா
கடப்பாடு மாரிமாட்டு
என்ஆற்றும் கொல்லோ உலகு. |
 |
|
2. |
தாளாற்றித்
தந்த பொருள்எல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தல் பொருட்டு. |
 |
|
3. |
புத்தேள்
உலகத்தும் ஈண்டும் பெறல்அரிதே
ஒப்புரவின் நல்ல பிற. |
 |
|
4. |
ஒத்தது அறிவான்
உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும். |
 |
|
5. |
ஊருணி
நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு. |
 |
|
6. |
பயன்மரம்
உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்
நயன்உடை யான்கண் படின். |
 |
|
7. |
மருந்தாகித்
தப்பா மரத்தற்றால் செல்வம்
பெருந்தகை யான்கண் படின். |
 |
|
8. |
இடன்இல்
பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்
கடன்அறி காட்சி யவர். |
 |
|
9. |
நயன்உடையான்
நல்கூர்ந்தான் ஆதல் செயும்நீர
செய்யாது அமைகலா வாறு. |
 |
|
10. |
ஒப்புரவி
னால்வரும் கேடுஎனின் அஃதொருவன்
விற்றுக்கோள் தக்கது உடைத்து. |
 |
|
|
திருக்குறள்
- தொகுப்பு |