|
24.
புகழ் -
திருக்குறள்
|
|
| 1. |
ஈதல்: இசைபட வாழ்தல்: அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு. |
 |
|
2. |
உரைப்பார்
உரைப்பவை எல்லாம் இரப்பார்க்குஒன்று
ஈவார்மேல் நிற்கும் புகழ். |
 |
|
3. |
ஒன்றா உலகத்து
உயர்ந்த புகழல்லால்
பொன்றாது நிற்பதுஒன்று இல். |
 |
|
4. |
நிலவரை
நீள்புகழ் ஆற்றின் புலவரைப்
போற்றாது புத்தேள் உலகு. |
 |
|
5. |
நத்தம்போல்
கேடும் உளதுஆகும் சாக்காடும்
வித்தகர்க்கு அல்லால் அரிது. |
 |
|
6. |
தோன்றின்
புகழோடு தோன்றுக: அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று. |
 |
|
7. |
புகழ்பட
வாழாதார் தம்நோவார் தம்மை
இகழ்வாரை நோவது எவன்? |
 |
|
8. |
வசைஎன்ப
வையத்தார்க்கு எல்லாம் இசைஎன்னும்
எச்சம் பெறாஅ விடின். |
 |
|
9. |
வசைஇலா வண்பயன்
குன்றும் இசைஇலா
யாக்கை பொறுத்த நிலம். |
 |
|
10. |
வசைஒழிய
வாழ்வாரே வாழ்வார் இசைஒழிய
வாழ்வாரே வாழா தவர். |
 |
|
|
திருக்குறள்
- தொகுப்பு |