|
25.
அருளுடைமை -
திருக்குறள்
|
|
| 1. |
அருட்செல்வம் செல்வத்துள் செல்வம்:
பொருட்செல்வம்
பூரியார் கண்ணும் உள. |
 |
|
2. |
நல்லாற்றான்
நாடி அருளாள்க: பல்லாற்றான்
தேரினும் அஃதே துணை. |
 |
|
3. |
அருள்சேர்ந்த
நெஞ்சினார்க்கு இல்லை இருள்சேர்ந்த
இன்னா உலகம் புகல். |
 |
|
4. |
மன்னுயிர் ஓம்பி
அருள்ஆள்வாற்கு இல்லென்ப
தன்உயிர் அஞ்சும் வினை. |
 |
|
5. |
அல்லல்
அருள்ஆள்வார்க்கு இல்லை வளிவழங்கும்
மல்லல்மா ஞாலம் கரி. |
 |
|
6. |
பொருள் நீங்கிப்
பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கி
அல்லவை செய்துஒழுகு வார். |
 |
|
7. |
அருளில்லார்க்கு
அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு. |
 |
|
8. |
பொருள்அற்றார்
பூப்பர் ஒருகால் அருள்அற்றார்
அற்றார்மற்று ஆதல் அரிது. |
 |
|
9. |
தெருளாதான்
மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின்
அருளாதான் செயயும் அறம். |
 |
|
10. |
வலியார்முன்
தன்னை நினைக்க,தான் தன்னின்
மெலியார்மேல் செல்லும் இடத்து. |
 |
|
|
திருக்குறள்
- தொகுப்பு |