Thirukkural
28. கூடாவொழுக்கம் திருக்குறள்  
1. வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்
ஐந்தும் அகத்தே நகும்.
2. வானுயர் தோற்றம் எவன்செய்யும் தன்நெஞ்சம்
தான்அறி குற்றப் படின்.
3. வலிஇல் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்
புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று.
4. தவம்மறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து
வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று.
5. பற்றுஅற்றேம் என்பார் படிற்றுறொழுக்கம் எற்றுஎற்றுஎன்று
ஏதம் பலவுந் தரும்.
6. நெஞ்சில் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து
வாழ்வாரின் வன்கணார் இல்.
7. புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றி
மூக்கிற் கரியார் உடைத்து.
8. மனத்தது மாசுஆக மாண்டார்நீ஢ ராடி
மறைந்துஒழுகு மாந்தர் பலர்.
9. கணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங் கன்ன
வினைபடு பாலால் கொளல்.
10. மழித்தலும் நீட்டலும் வேண்டா: உலகம்
பழித்தது ஒழித்து விடின்.
  திருக்குறள் - தொகுப்பு