|
28.
கூடாவொழுக்கம் -
திருக்குறள்
|
|
| 1. |
வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்
ஐந்தும் அகத்தே நகும். |
 |
|
2. |
வானுயர் தோற்றம்
எவன்செய்யும் தன்நெஞ்சம்
தான்அறி குற்றப் படின். |
 |
|
3. |
வலிஇல்
நிலைமையான் வல்லுருவம் பெற்றம்
புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று. |
 |
|
4. |
தவம்மறைந்து
அல்லவை செய்தல் புதல்மறைந்து
வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று. |
 |
|
5. |
பற்றுஅற்றேம்
என்பார் படிற்றுறொழுக்கம் எற்றுஎற்றுஎன்று
ஏதம் பலவுந் தரும். |
 |
|
6. |
நெஞ்சில்
துறவார் துறந்தார்போல் வஞ்சித்து
வாழ்வாரின் வன்கணார் இல். |
 |
|
7. |
புறங்குன்றி
கண்டனைய ரேனும் அகங்குன்றி
மூக்கிற் கரியார் உடைத்து. |
 |
|
8. |
மனத்தது மாசுஆக
மாண்டார்நீ ராடி
மறைந்துஒழுகு மாந்தர் பலர். |
 |
|
9. |
கணைகொடிது
யாழ்கோடு செவ்விதுஆங் கன்ன
வினைபடு பாலால் கொளல். |
 |
|
10. |
மழித்தலும்
நீட்டலும் வேண்டா: உலகம்
பழித்தது ஒழித்து விடின். |
 |
|
|
திருக்குறள்
- தொகுப்பு |