|
30.
வாய்மை -
திருக்குறள்
|
|
| 1. |
வாய்மை எனப்படுவது யாதுஎனின் யாதுஒன்றும்
தீமை இலாத சொலல். |
 |
|
2. |
பொய்ம்மையும்
வாய்மை இடத்த, புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின். |
 |
|
3. |
தன்னெஞ்சு
அறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்நெஞ்சே தன்னைச் சுடும். |
 |
|
4. |
உள்ளத்தால்
பொய்யாது ஒழுகின் உலகத்தார்
உள்ளத்துள் எல்லாம் உளன். |
 |
|
5. |
மனத்தொடு வாய்மை
மொழியின் தவத்தொடு
தானம்செய் வாரின் தலை. |
 |
|
6. |
பொய்யாமை அன்ன
புகழ்இல்லை எய்யாமை
எல்லா அறமும் தரும். |
 |
|
7. |
பொய்யாமை
பொய்யாமை ஆற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று. |
 |
|
8. |
புறந்தூய்மை
நீரான் அமையும் அகந்தூய்மை
வாய்மையால் காணப் படும். |
 |
|
9. |
எல்லா விளக்கும்
விளக்கல்ல: சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு. |
 |
|
10. |
யாமெய்யாக்
கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்
வாய்மையின் நல்ல பிற. |
 |
|
|
திருக்குறள்
- தொகுப்பு |