Thirukkural
31. வெகுளாமை திருக்குறள்  
1. செல்இடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்இடத்துக்
காக்கின்என் காவாக்கால் என்?
2. செல்லா இடத்துச் சினம்தீது செல்லிடத்தும்
இல்அதனின் தீய பிற.
3. மறத்தல் வெகுளியை யார்மாட்டும்: தீய
பிறத்தல் அதனான் வரும்.
4. நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்
பகையும் உளவோ பிற?
5. தன்னைத்தான் காக்கின் சினம்காக்க: காவாக்கால்
தன்னையே கொல்லும் சினம்.
6. சினம்என்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனம்என்னும்
ஏமப் புணையைச் சுடும்.
7. சினத்தைப் பொருள்என்று கொண்டவன் கேடு
நிலத்தறைந்தான் கைபிழையா தற்று.
8. இணர்எரி தோய்வுஅன்ன இன்னா செயினும்
புணரின் வெகுளாமை நன்று.
9. உள்ளியது எல்லாம் உடன்எய்தும் உள்ளத்தால்
உள்ளான் வெகுளி எனின்.
10. இறந்தார் இறந்தார் அனையர்: சினத்தைத்
துறந்தார் துறந்தார் துணை.
  திருக்குறள் - தொகுப்பு