|
34.
நிலையாமை -
திருக்குறள்
|
|
| 1. |
நில்லாத வற்றை நிலையின என்றுஉணரும்
புல்லறி வாண்மை கடை. |
 |
|
2. |
கூத்தாட்டு
அவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்
போக்கும் அதுவிளிந் தற்று. |
 |
|
3. |
அற்கா
இயல்பிற்றுச் செல்வம்: அதுபெற்றால்
அற்குப ஆங்கே செயல். |
 |
|
4. |
நாள்என
ஒன்றுபோல் காட்டி உயிர்ஈரும்
வாள்அது உணர்வார்ப் பெறின். |
 |
|
5. |
நாச்செற்று
விக்குள்மேல் வாராமுன் நல்வினை
மேற்சென்று செய்யப் படும். |
 |
|
6. |
நெருநல்
உளன்ஒருவன் இன்றுஇல்லை என்னும்
பெருமை உடைத்துஇவ் வுலகு. |
 |
|
7. |
ஒருபொழுதும்
வாழ்வது அறியார் கருதுப
கோடியும் அல்ல பல. |
 |
|
8. |
குடம்பை
தனித்துஒழியப் புள்பறந் தற்றே
உடம்போடு உயிரிடை நட்பு. |
 |
|
9. |
உறங்கு
வதுபோலும் சாக்காடு: உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு. |
 |
|
10. |
புக்கில்
அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்
துச்சில் இருந்த உயிர்க்கு? |
 |
|
|
திருக்குறள்
- தொகுப்பு |