|
37.
அவா அறுத்தல் -
திருக்குறள்
|
|
| 1. |
அவாஎன்ப எல்லா உயிர்க்கும்எஞ் ஞான்றும்
தவாஅப் பிறப்புஈனும் வித்து. |
 |
|
2. |
வேண்டுங்கால்
வேண்டும் பிறவாமை: மற்றுஅது
வேண்டாமை வேண்ட வரும். |
 |
|
3. |
வேண்டாமை அன்ன
விழுச்செல்வம் ஈண்டில்லை:
யாண்டும் அஃதுஒப்பது இல். |
 |
|
4. |
தூஉய்மை என்பது
அவாவின்மை: மற்றுஅது
வாஅய்மை வேண்ட வரும். |
 |
|
5. |
அற்றவர் என்பார்
அவாஅற்றார் மற்றையார்
அற்றாக அற்றது இலர். |
 |
|
6. |
அஞ்சுவது ஓரும்
அறனே: ஒருவனை
வஞ்சிப்பது ஓரும் அவா. |
 |
|
7. |
அவாவினை ஆற்ற
அறுப்பின் தவாவினை
தான்வேண்டும் ஆற்றான் வரும். |
 |
|
8. |
அவாஇல்லார்க்கு
இல்லாகும் துன்பம்அஃது உண்டேல்
தவாஅது மேன்மேல் வரும். |
 |
|
9. |
இன்பம் இடையறாது
ஈண்டும் அவாவென்னும்
துன்பத்துள் துன்பம் கெடின். |
 |
|
10. |
ஆரா இயற்கை
அவாநீப்பின் அந்நிலையே
பேரா இயற்கை தரும். |
 |
|
|
திருக்குறள்
- தொகுப்பு |