Thirukkural
38. ஊழ்திருக்குறள்  
1. ஆகுஊழால் தோன்றும் அசைவின்மை: கைப்பொருள்
போகுஊழால் தோன்றும் மடி.
2. பேதைப் படுக்கும் இழவுஊழ்: அறிவகற்றும்
ஆகல்ஊழ் உற்றக் கடை.
3. நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றும்தன்
உண்மை அறிவே மிகும்.
4. இருவேறு உலகத்து இயற்கை: திருவேறு
தௌ஢ளியர் ஆதலும் வேறு.
5. நல்லவை எல்லாஅம் தீயவாம் தீயவும்
நல்லவாம் செல்வம் செயற்கு.
6. பரியினும் ஆகாவாம் பால்அல்ல உய்த்துச்
சொரியினும் போகா தம.
7. வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது.
8. துறப்பார்மன் துப்புர வில்லார் உறற்பால
ஊட்டா கழியும் எனின்.
9. நன்றுஆம்கால் நல்லவாக் காண்பவர் அன்றுஆம்கால்
அல்லற் படுவது எவன்?
10. ஊழின் பெருவலி யாவுள? மற்றொன்று
சூழினும் தான்முந் துறும்.
  திருக்குறள் - தொகுப்பு