|
38.
ஊழ் -
திருக்குறள்
|
|
| 1. |
ஆகுஊழால் தோன்றும் அசைவின்மை: கைப்பொருள்
போகுஊழால் தோன்றும் மடி. |
 |
|
2. |
பேதைப்
படுக்கும் இழவுஊழ்: அறிவகற்றும்
ஆகல்ஊழ் உற்றக் கடை. |
 |
|
3. |
நுண்ணிய நூல்பல
கற்பினும் மற்றும்தன்
உண்மை அறிவே மிகும். |
 |
|
4. |
இருவேறு உலகத்து
இயற்கை: திருவேறு
தௌளியர் ஆதலும் வேறு. |
 |
|
5. |
நல்லவை எல்லாஅம்
தீயவாம் தீயவும்
நல்லவாம் செல்வம் செயற்கு. |
 |
|
6. |
பரியினும்
ஆகாவாம் பால்அல்ல உய்த்துச்
சொரியினும் போகா தம. |
 |
|
7. |
வகுத்தான்
வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது. |
 |
|
8. |
துறப்பார்மன்
துப்புர வில்லார் உறற்பால
ஊட்டா கழியும் எனின். |
 |
|
9. |
நன்றுஆம்கால்
நல்லவாக் காண்பவர் அன்றுஆம்கால்
அல்லற் படுவது எவன்? |
 |
|
10. |
ஊழின் பெருவலி
யாவுள? மற்றொன்று
சூழினும் தான்முந் துறும். |
 |
|
|
திருக்குறள்
- தொகுப்பு |