Thirukkural
40. கல்விதிருக்குறள்  
1. கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.
2. எண்என்ப ஏனை எழுத்துஎன்ப இவ்விரண்டும்
கண்என்ப வாழும் உயிர்க்கு.
3. கண்உடையர் என்பவர் கற்றோர்: முகத்துஇரண்டு
புண்உடையர் கல்லா தவர்.
4. உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில்.
5. உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்
கடையரே கல்லா தவர்.
6. தொட்டனைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத்து ஊறும் அறிவு.
7. யாதானும் நாடாமால் ஊராமால் என்ஒருவன்
சாந்துணையுங் கல்லாத வாறு.
8. ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப்பு உடைத்து.
9. தாம்இன் புறுவது உலகுஇன் புறக்கண்டு
காமுறுவர் கற்றறிந் தார்.
10. கேடுஇல் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடுஅல்ல மற்றை யவை.
  திருக்குறள் - தொகுப்பு