|
43.
அறிவுடைமை -
திருக்குறள்
|
|
| 1. |
அறிவற்றங் காக்கும் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்கல் ஆகா அரண். |
 |
|
2. |
சென்ற இடத்தால்
செலவிடா தீதுஒரீஇ
நன்றின்பால் உய்ப்பது அறிவு. |
 |
|
3. |
எப்பொருள்
யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு. |
 |
|
4. |
எண்பொருள வாகச்
செலச்சொல்லித் தான்பிறர்வாய்
நுண்பொருள் காண்பது அறிவு. |
 |
|
5. |
உலகம் தழீஇயது
ஒட்பம்: மலர்தலும்
கூம்பலும் இல்லது அறிவு. |
 |
|
6. |
எவ்வது உறைவது
உலகம் உலகத்தோடு
அவ்வது உறைவது அறிவு. |
 |
|
7. |
அறிவுடையார் ஆவது அறிவார் அறிவிலார்
அஃதுஅறி கல்லா தவர். |
 |
|
8. |
அஞ்சுவது
அஞ்சாமை பேதைமை: அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில். |
 |
|
9. |
எதிரதாக்
காக்கும் அறிவினார்க்கு இல்லை
அதிர வருவதோர் நோய். |
 |
|
10. |
அறிவுடையார்
எல்லாம் உடையார் அறிவிலார்
என்னுடைய ரேனும் இலர். |
 |
|
|
திருக்குறள்
- தொகுப்பு |