Thirukkural
43. அறிவுடைமைதிருக்குறள்  
1. அறிவற்றங் காக்கும் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்கல் ஆகா அரண்.
2. சென்ற இடத்தால் செலவிடா தீதுஒரீஇ
நன்றின்பால் உய்ப்பது அறிவு.
3. எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.
4. எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்
நுண்பொருள் காண்பது அறிவு.
5. உலகம் தழீஇயது ஒட்பம்: மலர்தலும்
கூம்பலும் இல்லது அறிவு.
6. எவ்வது உறைவது உலகம் உலகத்தோடு
அவ்வது உறைவது அறிவு.
7. அறிவுடையார் ஆவது அறிவார் அறிவிலார்
அஃதுஅறி கல்லா தவர்.
8. அஞ்சுவது அஞ்சாமை பேதைமை: அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில்.
9. எதிரதாக் காக்கும் அறிவினார்க்கு இல்லை
அதிர வருவதோர் நோய்.
10. அறிவுடையார் எல்லாம் உடையார் அறிவிலார்
என்னுடைய ரேனும் இலர்.
  திருக்குறள் - தொகுப்பு