|
45.
பெரியாரைத் துணைக்கோடல் -
திருக்குறள்
|
|
| 1. |
அறன்அறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறன்அறிந்து தேர்ந்து கொளல். |
 |
|
2. |
உற்றநோய் நீக்கி
உறாஅமை முன்காக்கும்
பெற்றியார்ப் பேணிக் கொளல். |
 |
|
3. |
அரியவற்றுள்
எல்லாம் அரிதே பெரியாரைப்
பேணித் தமராக் கொளல். |
 |
|
4. |
தம்மின்
பெரியார் தமரா ஒழுகுதல்
வன்மையுள் எல்லாம் தலை. |
 |
|
5. |
சூழ்வார்கண்
ணாக ஒழுகலான் மன்னவன்
சூழ்வாரைச் சூழ்ந்து கொளல். |
 |
|
6. |
தக்கார்
இனத்தனாய்த் தான்ஒழுக வல்லானைச்
செற்றார் செயக்கிடந்தது இல். |
 |
|
7. |
இடிக்கும் துணையாரை ஆள்வாரை யாரே
கெடுக்கும் தகைமை யவர்? |
 |
|
8. |
இடிப்பாரை
இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பார் இலானுங் கெடும். |
 |
|
9. |
முதல்இலார்க்கு
ஊதியம் இல்லை மதலையாம்
சார்புஇலார்க்கு இல்லை நிலை. |
 |
|
10. |
பல்லார்
பகைகொளலின் பத்தடுத்த தீமைத்தே
நல்லார் தொடர்கை விடல். |
 |
|
|
திருக்குறள்
- தொகுப்பு |