|
46.
சிற்றினஞ் சேராமை -
திருக்குறள்
|
|
| 1. |
சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்
சுற்றமாச் சூழ்ந்து விடும். |
 |
|
2. |
நிலத்துஇயல்பால்
நீர்திரிந்து அற்றாகும் மாந்தர்க்கு
இனத்துஇயல்பது ஆகும் அறிவு. |
 |
|
3. |
மனத்தான்ஆம்
மாந்தர்க் குணர்ச்சி இனத்தான்ஆம்
இன்னான் எனப்படும் சொல். |
 |
|
4. |
மனத்து
உளதுபோலக் காட்டி ஒருவற்கு
இனத்துஉள தாகும் அறிவு. |
 |
|
5. |
மனம்தூய்மை
செய்வினை தூய்மை இரண்டும்
இனம்தூய்மை தூவா வரும். |
 |
|
6. |
மனம்தூயார்க்கு
எச்சம்நன் றாகும் இனம்தூயார்க்கு
இல்லைநன்று ஆகா வினை. |
 |
|
7. |
மனநலம் மன்னுயிர்க்கு ஆக்கம் இனநலம்
எல்லாப் புகழும் தரும். |
 |
|
8. |
மனநலம்
நன்குஉடைய ராயினும் சான்றோர்க்கு
இனநலம் ஏமாப்பு உடைத்து. |
 |
|
9. |
மனநலத்தின்
ஆகும் மறுமை:மற் றஃதும்
இனநலத்தின் ஏமாப் புடைத்து. |
 |
|
10. |
நல்லினத்தின்
ஊங்கும் துணையில்லை: தீயினத்தின்
அல்லற் படுப்பதூஉம் இல். |
 |
|
|
திருக்குறள்
- தொகுப்பு |