Thirukkural
46. சிற்றினஞ் சேராமை திருக்குறள்  
1. சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்
சுற்றமாச் சூழ்ந்து விடும்.
2. நிலத்துஇயல்பால் நீர்திரிந்து அற்றாகும் மாந்தர்க்கு
இனத்துஇயல்பது ஆகும் அறிவு.
3. மனத்தான்ஆம் மாந்தர்க் குணர்ச்சி இனத்தான்ஆம்
இன்னான் எனப்படும் சொல்.
4. மனத்து உளதுபோலக் காட்டி ஒருவற்கு
இனத்துஉள தாகும் அறிவு.
5. மனம்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்
இனம்தூய்மை தூவா வரும்.
6. மனம்தூயார்க்கு எச்சம்நன் றாகும் இனம்தூயார்க்கு
இல்லைநன்று ஆகா வினை.
7. மனநலம் மன்னுயிர்க்கு ஆக்கம் இனநலம்
எல்லாப் புகழும் தரும்.
8. மனநலம் நன்குஉடைய ராயினும் சான்றோர்க்கு
இனநலம் ஏமாப்பு உடைத்து.
9. மனநலத்தின் ஆகும் மறுமை:மற் றஃதும்
இனநலத்தின் ஏமாப் புடைத்து.
10. நல்லினத்தின் ஊங்கும் துணையில்லை: தீயினத்தின்
அல்லற் படுப்பதூஉம் இல்.
  திருக்குறள் - தொகுப்பு