|
47.
தெரிந்து செயல்வகை -
திருக்குறள்
|
|
| 1. |
அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்
ஊதியமும் சூழ்ந்து செயல். |
 |
|
2. |
தெரிந்த
இனத்தொடு தேர்ந்துஎண்ணிச் செய்வார்க்கு
அரும்பொருள் யாதொன்றும் இல். |
 |
|
3. |
ஆக்கங் கருதி
முதல்இழக்கும் செய்வினை
ஊக்கார் அறிவுடை யார். |
 |
|
4. |
தெளிவு இலதனைத்
தொடங்கார் இளிவுஎன்னும்
ஏதப்பாடு அஞ்சு பவர். |
 |
|
5. |
வகையறச் சூழாது
எழுதல் பகைவரைப்
பாத்திப் படுப்பதோர் ஆறு. |
 |
|
6. |
செய்தக்க அல்ல
செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானும் கெடும். |
 |
|
7. |
எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு. |
 |
|
8. |
ஆற்றின் வருந்தா
வருத்தம் பலர்நின்று
போற்றினும் பொத்துப் படும். |
 |
|
9. |
நன்றுஆற்ற
லுள்ளும் தவறுஉண்டு அவரவர்
பண்பறிந்து ஆற்றாக் கடை. |
 |
|
10. |
எள்ளாத எண்ணிச்
செயல்வேண்டும் தம்மொடு
கொள்ளாத கொள்ளாது உலகு. |
 |
|
|
திருக்குறள்
- தொகுப்பு |