|
48.
வலியறிதல் -
திருக்குறள்
|
|
| 1. |
வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியும் தூக்கிச் செயல். |
 |
|
2. |
ஒல்வது அறிவது
அறிந்ததன் கண்தங்கிச்
செல்வார்க்குச் செல்லாதது இல். |
 |
|
3. |
உடைத்தம்
வலிஅறியார் ஊக்கத்தின் ஊக்கி
இடைக்கண் முரிந்தார் பலர். |
 |
|
4. |
அமைந்தாங்கு
ஒழுகான் அளவுஅறியான் தன்னை
வியந்தான் விரைந்து கெடும். |
 |
|
5. |
பீலிபெய்
சாகாடும் அச்சுஇறும் அப்பண்டம்
சால மிகுத்துப் பெயின். |
 |
|
6. |
நுனிக்கொம்பர்
ஏறினார் அஃதுஇறந்து ஊக்கின்
உயிர்க்குஇறுதி யாகி விடும். |
 |
|
7. |
ஆற்றின் அளவறிந்து ஈக: அதுபொருள்
போற்றி வழங்கும் நெறி. |
 |
|
8. |
ஆகுஆறு
அளவுஇட்டிது ஆயினும் கேடுஇல்லை
போகுஆறு அகலாக் கடை. |
 |
|
9. |
அளவுஅறிந்து
வாழாதான் வாழ்க்கை உளபோல
இல்லாகித் தோன்றாக் கெடும். |
 |
|
10. |
உளவரை தூக்காத
ஒப்புரவு ஆண்மை
வளவரை வல்லைக் கெடும். |
 |
|
|
திருக்குறள்
- தொகுப்பு |