|
50.
இடனறிதல் -
திருக்குறள்
|
|
| 1. |
தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்
இடங்கண்ட பின்அல் லது. |
 |
|
2. |
முரண்சேர்ந்த
மொய்ம்பி னவர்க்கும் அரண்சேர்ந்துஆம்
ஆக்கம் பலவுந் தரும். |
 |
|
3. |
ஆற்றாரும் ஆற்றி
அடுப இடன்அறிந்து
போற்றார்கண் போற்றிச் செயின். |
 |
|
4. |
எண்ணியார்
எண்ணம் இழப்பர் இடன்அறிந்து
துன்னியார் துன்னிச் செயின். |
 |
|
5. |
நெடும்புனலுள்
வெல்லும் முதலை அடும்புனலின்
நீங்கின் அதனைப் பிற. |
 |
|
6. |
கடல்ஓடா கால்வல்
நெடுந்தேர் கடல்ஓடும்
நாவாயும் ஓடா நிலத்து. |
 |
|
7. |
அஞ்சாமை அல்லால் துணைவேண்டா எஞ்சாமை
எண்ணி இடத்தாற் செயின். |
 |
|
8. |
சிறுபடையான்
செல்லிடம் சேரின் உறுபடையான்
ஊக்கம் அழிந்து விடும். |
 |
|
9. |
சிறைநலனும்
சீரும் இலர்எனினும் மாந்தர்
உறைநிலத்தோடு ஒட்டல் அரிது. |
 |
|
10. |
கால்ஆழ் களரின்
நரிஅடும் கண்அஞ்சா
வேலாள் முகத்த களிறு. |
 |
|
|
திருக்குறள்
- தொகுப்பு |