|
53.
சுற்றந்தழால் -
திருக்குறள்
|
|
| 1. |
பற்றற்ற கண்ணும் பழமைபா ராட்டுதல்
சுற்றத்தார் கண்ணே உள. |
 |
|
2. |
விருப்புஅறாச்
சுற்றம் இயையின் அருப்புஅறா
ஆக்கம் பலவும் தரும். |
 |
|
3. |
அளவளாவு
இல்லாதான் வாழ்க்கை குளவளாக்
கோடுஇன்றி நீர்நிறைந் தற்று. |
 |
|
4. |
சுற்றத்தால்
சுற்றப் படஒழுகல் செல்வம்தான்
பெற்றத்தால் பெற்ற பயன். |
 |
|
5. |
கொடுத்தலும்
இன்சொலும் ஆற்றின் அடுக்கிய
சுற்றத்தால் சுற்றப் படும். |
 |
|
6. |
பெரும்கொடையான்
பேணான் வெகுளி அவனின்
மருங்குஉடையார் மாநிலத்து இல். |
 |
|
7. |
காக்கை கரவா கரைந்துஉண்ணும் ஆக்கமும்
அன்னநீ ரார்க்கே உள. |
 |
|
8. |
பொதுநோக்கான்
வேந்தன் வரிசையா நோக்கின்
அதுநோக்கி வாழ்வார் பலர். |
 |
|
9. |
தமராகித்
தன்துறந்தார் சுற்றம் அமராமைக்
காரணம் இன்றி வரும். |
 |
|
10. |
உழைப்பிரிந்து
காரணத்தின் வந்தானை வேந்தன்
இழைத்துஇருந்து எண்ணிக் கொளல். |
 |
|
|
திருக்குறள்
- தொகுப்பு |