|
56.
கொடுங்கோன்மை -
திருக்குறள்
|
|
| 1. |
கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு
அல்லவை செய்துஒழுகும் வேந்து. |
 |
|
2. |
வேலொடு நின்றான்
இடுஎன் றதுபோலும்
கோலொடு நின்றான் இரவு. |
 |
|
3. |
நாள்தோறும் நாடி முறைசெய்யா மன்னவன்
நாள்தோறும் நாடு கெடும். |
 |
|
4. |
கூழும் குடியும்
ஒருங்குஇழக்கும் கோல்கோடிச்
சூழாது செய்யும் அரசு. |
 |
|
5. |
அல்லற்பட்டு
ஆற்றாது அழுதகண் ணீர்அன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை. |
 |
|
6. |
மன்னர்க்கு
மன்னுதல் செங்கோன்மை அஃதுஇன்றேல்
மன்னாவாம் மன்னர்க்கு ஒளி. |
 |
|
7. |
துளியின்மை ஞாலத்திற்கு எற்றுஅற்றே வேந்தன்
அளியின்மை வாழும் உயிர்க்கு. |
 |
|
8. |
இன்மையின்
இன்னாது உடைமை முறைசெய்யா
மன்னவன் கோல்கீழ்ப் படின். |
 |
|
9. |
முறைகோடி
மன்னவன் செய்யின் உறைகோடி
ஒல்லாது வானம் பெயல். |
 |
|
10. |
ஆபயன் குன்றும்
அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின். |
 |
|
|
திருக்குறள்
- தொகுப்பு |