|
57.
வெருவந்த செய்யாமை -
திருக்குறள்
|
|
| 1. |
தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால்
ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து. |
 |
|
2. |
கடிதுஓச்சி
மெல்ல எறிக நெடிதுஆக்கம்
நீங்காமை வேண்டு பவர். |
 |
|
3. |
வெருவந்த செய்துஒழுகும் வெங்கோலன் ஆயின்
ஒருவந்தம் ஒல்லைக் கெடும். |
 |
|
4. |
இறைகடியன்
என்றுஉரைக்கும் இன்னாச்சொல் வேந்தன்
உறைகடுகி ஒல்லைக் கெடும். |
 |
|
5. |
அருஞ்செவ்வி
இன்னா முகத்தான் பெருஞ்செல்வம்
பேஎய்கண் டன்னது உடைத்து. |
 |
|
6. |
கடுஞ்சொல்லன்
கண்ணிலன் ஆயின் நெடுஞ்செல்வம்
நீடுஇன்றி ஆங்கே கெடும். |
 |
|
7. |
கடுமொழியும் கைஇகந்த தண்டமும் வேந்தன்
அடுமுரண் தேய்க்கும் அரம். |
 |
|
8. |
இனத்ததுஆற்றி
எண்ணாத வேந்தன் சினத்துஆற்றிச்
சீறின் சிறுகும் திரு. |
 |
|
9. |
செருவந்த
போழ்தில் சிறைசெய்யா வேந்தன்
வெருவந்து வெய்து கெடும். |
 |
|
10. |
கல்லார்ப்
பிணிக்கும் கடுங்கோல்: அதுவல்லது
இல்லை நிலக்குப் பொறை. |
 |
|
|
திருக்குறள்
- தொகுப்பு |