Thirukkural
58. கண்ணோட்டம் -  திருக்குறள்  
1. கண்ணோட்டம் என்னும் கழிபெரும் காரிகை
உண்மையான் உண்டுஇவ் வுலகு.
2. கண்ணோட்டத்து உள்ளது உலகியல்; அஃதிலார்
உன்மை நிலக்குப் பொறை.
3. பண்என்னாம் பாடற்கு இயைபின்றேல கண்என்னாம்
கண்ணோட்டம் இல்லாத கண்?
4. உளபோல் முகத்துஎவன் செய்யும் அளவினால்
கண்ணேட்டம் இல்லாத கண்?
5. கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் அஃதின்றேல்
புண்ணென்று உணரப் படும்.
6. மண்ணோடு இயைந்த மரத்தனையர் கண்ணோடு
இயைந்துகண் ணோடா தவர்.
7. கண்ணோட்டம் இல்லவர் கண்ணிலர், கண்ணுடையார்
கண்ணோட்டம் இன்மையும் இல்.
8. கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு
உரிமை உடைத்துஇவ் வுலகு.
9. ஒறுத்துஆற்றும் பண்பினார் கண்ணும்கண் ணோடிப்
பொறுத்துஆற்றும் பண்பே தலை.
10. பெயக்கண்டும் நஞ்சுஉண்டு அமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர்.
  திருக்குறள் - தொகுப்பு