|
59.
ஒற்றாடல் -
திருக்குறள்
|
|
| 1. |
ஒற்றும் உரைசான்ற நூலும் இவைஇரண்டும்
தெற்றென்க மன்னவன் கண். |
 |
|
2. |
எல்லார்க்கும்
எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்
வல்லறிதல் வேந்தன் தொழில். |
 |
|
3. |
ஒற்றினான் ஒற்றிப் பொருள்தெரியா மன்னவன்
கொற்றம் கொளக்கிடந்தது இல். |
 |
|
4. |
வினைசெய்வார்
தம்சுற்றம் வேண்டாதார் என்றாங்கு
அனைவரையும் ஆராய்வது ஒற்று. |
 |
|
5. |
கடாஅ உருவொடு
கண்அஞ்சாது யாண்டும்
உகாஅமை வல்லதே ஒற்று. |
 |
|
6. |
துறந்தார்
படிவத்தர் ஆகி இறந்துஆராய்ந்து
என்செயினும் சோர்வுஇலது ஒற்று. |
 |
|
7. |
மறைந்தவை கேட்கவற்று ஆகி அறிந்தவை
ஐயப்பாடு இல்லதே ஒற்று. |
 |
|
8. |
ஒற்றுஒற்றித்
தந்த பொருளையும் மற்றுமோர்
ஒற்றினால் ஒற்றிக் கொளல். |
 |
|
9. |
ஒற்றுஒற்று
உணராமை ஆள்க உடன்மூவர்
சொல்தொக்க தேறப் படும். |
 |
|
10. |
சிறப்புஅறிய
ஒற்றின்கண் செய்யற்க: செய்யின்
புறப்படுத்தான் ஆகும் மறை. |
 |
|
|
திருக்குறள்
- தொகுப்பு |