Thirukkural
60. ஊக்கமுடைமை -  திருக்குறள்  
1. உடையர் எனப்படுவது ஊக்கம்அஃது இல்லார்
உடையது உடையரோ மற்று?
2. உள்ளம் உடைமை உடைமை: பொருள்உடைமை
நில்லாது நீங்கி விடும்.
3. ஆக்கம் இழந்தேம்என்று அல்லாவார் ஊக்கம்
ஒருவந்தம் கைத்துஉடை யார்.
4. ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா
ஊக்கம் உடையா னுழை.
5. வௌ஢ளத்து அனைய மலர்நீட்டம்: மாந்தர்தம்
உள்ளத்து அனையது உயர்வு.
6. உள்ளுவது எல்லாம் உயர்வுள்ளல்: மற்றுஅது
தள்ளினும் தள்ளாமை நீர்த்து.
7. சிதைவுஇடத்து ஒல்கார் உரவோர் புதையம்பின்
பட்டுப்பாடு ஊன்றும் களிறு.
8. உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து
வள்ளியம் என்னும் செருக்கு.
9. பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை
வெரூஉம் புலிதாக் குறின்.
10. உரம்ஒருவற்கு உள்ள வெறுக்கை: அஃதுஇல்லார்
மரம்மக்கள் ஆதலே வேறு.
  திருக்குறள் - தொகுப்பு