|
64.
அமைச்சு -
திருக்குறள்
|
|
| 1. |
கருவியும் காலமும் செய்கையும் செய்யும்
அருவினையும் மாண்டது அமைச்சு. |
 |
|
2. |
வன்கண்
குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோடு
ஐந்துடன் மாண்டது அமைச்சு. |
 |
|
3. |
பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப்
பொருத்தலும் வல்லது அமைச்சு. |
 |
|
4. |
தெரிதலும்
தேர்ந்து செயலும் ஒருதலையாச்
சொல்லலும் வல்லது அமைச்சு. |
 |
|
5. |
அறன்அறிந்து
ஆன்றுஅமைந்த சொல்லான்எஞ் ஞான்றும்
திறன்அறிந்தான் தேர்ச்சித் துணை. |
 |
|
6. |
மதிநுட்பம்
நூலோடு உடையார்க்கு அதிநுட்பம்
யாஉள முன்நிற் பவை. |
 |
|
7. |
செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்து
இயற்கை அறிந்து செயல். |
 |
|
8. |
அறிகொன்று
அறியான் எனினும் உறுதி
உழைஇருந்தான் கூறல் கடன். |
 |
|
9. |
பழுதுஎண்ணும்
மந்திரியின் பக்கத்துள் தெவ்வோர்
எழுபது கோடி உறும். |
 |
|
10. |
முறைப்படச்
சூழ்ந்தும் முடிவுஇலவே செய்வர்
திறப்பாடு இலாஅ தவர். |
 |
|
|
திருக்குறள்
- தொகுப்பு |