|
67.
வினைத்திட்பம் -
திருக்குறள்
|
|
| 1. |
வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்
மற்றைய எல்லாம் பிற. |
 |
|
2. |
ஊறுஒரால்
உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின்
ஆறுஎன்பர் ஆய்ந்தவர் கோள். |
 |
|
3. |
கடைக்கொட்கச் செய்தக்கது ஆண்மை இடைக்கொட்கின்
எற்றா விழுமம் தரும். |
 |
|
4. |
சொல்லுதல்
யார்க்கும் எளிய: அரியஆம்
சொல்லிய வண்ணம் செயல். |
 |
|
5. |
வீறுஎய்தி
மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்கண்
ஊறுஎய்தி உள்ளப் படும். |
 |
|
6. |
எண்ணிய
எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின். |
 |
|
7. |
உருவுகண்டு எள்ளாமை வேண்டும்
உருள்பெருந்தேர்க்கு
அச்சுஆணி அன்னார் உடைத்து. |
 |
|
8. |
கலங்காது கண்ட
வினைக்கண் துளங்காது
தூக்கம் கடிந்து செயல். |
 |
|
9. |
துன்பம்
உறவரினும் செய்க துணிவுஆற்றி
இன்பம் பயக்கும் வினை. |
 |
|
10. |
எனைத்திட்பம்
எய்தியக் கண்ணும் வினைத்திட்பம்
வேண்டாரை வேண்டாது உலகு. |
 |
|
|
திருக்குறள்
- தொகுப்பு |