|
68.
வினைசெயல்வகை -
திருக்குறள்
|
|
| 1. |
சூழ்ச்சி முடிவு துணிவுஎய்தல் அத்துணிவு
தாழ்ச்சியுள் தங்குதல் தீது. |
 |
|
2. |
தூங்குக
தூங்கிச் செயற்பால: தூங்கற்க
தூங்காது செய்யும் வினை. |
 |
|
3. |
ஒல்லும்வாய் எல்லாம் வினைநன்றே: ஒல்லாக்கால்
செல்லும்வாய் நோக்கிச் செயல். |
 |
|
4. |
வினைபகை
என்றஇரண்டின் எச்சம் நினையும்கால்
தீஎச்சம் போலத் தெறும். |
 |
|
5. |
பொருள்கருவி
காலம் வினைஇடனொடு ஐந்தும்
இருள்தீர எண்ணிச் செயல். |
 |
|
6. |
முடிவும்
இடையூறும் முற்றியாங்கு எய்தும்
படுபயனும் பார்த்துச் செயல். |
 |
|
7. |
செய்வினை செய்வான் செயல்முறை அவ்வினை
உள்ளறிவான் உள்ளம் கொளல். |
 |
|
8. |
வினையால்
வினையாக்கிக் கோடல் நனைகவுள்
யானையால் யானையாத் தற்று. |
 |
|
9. |
நட்டார்க்கு
நல்ல செயலின் விரைந்ததே
ஒட்டாரை ஒட்டிக் கொளல். |
 |
|
10. |
உறைசிறியார்
உள்நடுங்கல் அஞ்சிக் குறைபெறின்
கொள்வர் பெரியார்ப் பணிந்து. |
 |
|
|
திருக்குறள்
- தொகுப்பு |