|
70.
மன்னரைச் சேர்ந்தொழுகல் -
திருக்குறள்
|
|
| 1. |
அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க
இகல்வேந்தர்ச் சேர்ந்துஒழுகு வார். |
 |
|
2. |
மன்னர் விழைப
விழையாமை மன்னரால்
மன்னிய ஆக்கம் தரும். |
 |
|
3. |
போற்றின் அரியவை போற்றல் கடுத்தபின்
தேற்றுதல் யார்க்கும் அரிது. |
 |
|
4. |
செவிச்சொல்லும்
சேர்ந்த நகையும் அவித்துஒழுகல்
ஆன்ற பெரியா ரகத்து. |
 |
|
5. |
எப்பொருளும்
ஓரார் தொடரார்மற்று அப்பொருளை
விட்டக்கால் கேட்க மறை. |
 |
|
6. |
குறிப்புஅறிந்து
காலம் கருதி வெறுப்புஇல
வேண்டுப வேட்பச் சொலல். |
 |
|
7. |
வேட்பன சொல்லி வினையில எஞ்ஞான்றும்
கேட்பினும் சொல்லா விடல். |
 |
|
8. |
இளையர்
இனமுறையர் என்றுஇகழார் நின்ற
ஔதயோடு ஒழுகப் படும். |
 |
|
9. |
கொளப்பட்டேம்
என்றெண்ணிக் கொள்ளாத செய்யார்
துளக்குற்ற காட்சி யவர். |
 |
|
10. |
பழையம்
எனக்கருதிப் பண்புஅல்ல செய்யும்
கெழுதகைமை கேடு தரும். |
 |
|
|
திருக்குறள்
- தொகுப்பு |