|
71.
குறிப்பறிதல் -
திருக்குறள்
|
|
| 1. |
கூறாமை நோக்கிக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும்
மாறாநீர் வையக்கு அணி. |
 |
|
2. |
ஐயப் படாஅது
அகத்தது உணர்வானைத்
தெய்வத்தோடு ஒப்பக் கொளல். |
 |
|
3. |
குறிப்பின் குறிப்புஉணர் வாரை உறுப்பினுள்
யாது கொடுத்தும் கொளல். |
 |
|
4. |
குறித்தது
கூறாமைக் கொள்வாரோடு ஏனை
உறுப்புஓர் அனையரால் வேறு. |
 |
|
5. |
குறிப்பின்
குறிப்புஉணரா வாயின் உறுப்பினுள்
என்ன பயத்தவோ கண். |
 |
|
6. |
அடுத்தது
காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்
கடுத்தது காட்டும் முகம். |
 |
|
7. |
முகத்தின் முதுக்குறைந்தது உண்டோ உவப்பினும்
காயினும் தான்முந் துறும். |
 |
|
8. |
முகம்நோக்கி
நிற்க அமையும் அகம்நோக்கி
உற்றது உணர்வார்ப் பெறின். |
 |
|
9. |
பகைமையும்
கேண்மையும் கண்உரைக்கும் கண்ணின்
வகைமை உணர்வார்ப் பெறின். |
 |
|
10. |
நுண்ணியம்
என்பார் அளக்கும்கோல் காணும்கால்
கண்அல்லது இல்லை பிற. |
 |
|
|
திருக்குறள்
- தொகுப்பு |