|
73.
அவையஞ்சாமை -
திருக்குறள்
|
|
| 1. |
வகைஅறிந்து வல்லவை வாய்சோரார் சொல்லின்
தொகைஅறிந்த தூய்மை யவர். |
 |
|
2. |
கற்றாருள்
கற்றார் எனப்படுவர் கற்றார்முன்
கற்ற செலச்சொல்லு வார். |
 |
|
3. |
பகையகத்துச் சாவார் எளியர் அரியர்
அவையகத்து அஞ்சா தவர். |
 |
|
4. |
கற்றார்முன்
கற்ற செலச்சொல்லித் தாம்கற்ற
மிக்காருள் மிக்க கொளல். |
 |
|
5. |
ஆற்றின்
அளவுஅறிந்து கற்க அவைஅஞ்சா
மாற்றம் கொடுத்தல் பொருட்டு. |
 |
|
6. |
வாளொடுஎன்
வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடுஎன்
நுண்ணவை அஞ்சு பவர்க்கு? |
 |
|
7. |
பகையகத்துப் பேடிகை ஔவாள் அவையகத்து
அஞ்சு மவன்கற்ற நூல். |
 |
|
8. |
பல்லவை கற்றும்
பயம்இலரே நல்லவையுள்
நன்கு செலச்செல்லா தார். |
 |
|
9. |
கல்லா தவரின்
கடையென்ப கற்றுஅறிந்தும்
நல்லார் அவைஅஞ்சு வார். |
 |
|
10. |
உளர்எனினும்
இல்லாரொடு ஒப்பர் களன்அஞ்சிக்
கற்ற செலச்சொல்லா தார். |
 |
|
|
திருக்குறள்
- தொகுப்பு |