Thirukkural
77. படைமாட்சி -  திருக்குறள்  
1. உறுப்புஅமைந்து ஊறுஅஞ்சா வெல்படை வேந்தன்
வெறுக்கையுள் எல்லாம் தலை.
2. உலைவுஇடத்து ஊறுஅஞ்சா வன்கண் தொலைவுஇடத்துத்
தொல்படைக்கு அல்லால் அரிது.
3. ஒலித்தக்கால் என்ஆம் உவரி எலிப்பகை?
நாகம் உயிர்ப்பக் கெடும்.
4. அழிவுஇன்று அறைபோகாது ஆகி வழிவந்த
வன்க ணதுவே படை.
5. கூற்றுஉடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும்
ஆற்ற லதுவே படை.
6. மறம்மானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்
எனநான்கே ஏமம் படைக்கு.
7. தார்தாங்கிச் செல்வது தானை தலைவந்த
போர்தாங்கும் தன்மை அறிந்து.
8. அடல்தகையும் ஆற்றலும் இல்எனினும் தானை
படைத்தகையால் பாடு பெறும்.
9. சிறுமையும் செல்லாத் துனியும் வறுமையும்
இல்லாயின் வெல்லும் படை.
10. நிலைமக்கள் சால உடைத்துஎனினும் தானை
தலைமக்கள் இல்வழி இல்.
  திருக்குறள் - தொகுப்பு