|
78.
படைச்செருக்கு -
திருக்குறள்
|
|
| 1. |
என்ஐமுன் நில்லன்மின் தெவ்விர் ! பலர்என்ஐ
முன்நின்று கல்நின் றவர்! |
 |
|
2. |
கான முயல்எய்த
அம்பினில் யானை
பிழைத்தவேல் ஏந்தல் இனிது. |
 |
|
3. |
பேராண்மை என்ப தறுகண்:ஒன்று உற்றக்கால்
ஊராண்மை மற்றுஅதன் எஃகு. |
 |
|
4. |
கைவேல்
களிற்றோடு போக்கி வருபவன்
மெய்வேல் பறியா நகும். |
 |
|
5. |
விழித்தகண் வேல்கொண்டு எறிய அழித்துஇமைப்பின்
ஒட்டன்றோ வன்க ணவர்க்கு. |
 |
|
6. |
விழுப்புண்
படாதநாள் எல்லாம் வழுக்கினுள்
வைக்கும்தன் நாளை எடுத்து. |
 |
|
7. |
சுழலும் இசைவேண்டி வேண்டா உயிரார்
கழல்யாப்புக் காரிகை நீர்த்து. |
 |
|
8. |
உறின்உயிர்
அஞ்சா மறவர் இறைவன்
செறினும்சீர் குன்றல் இலர். |
 |
|
9. |
இழைத்தது
இகவாமைச் சாவாரை யாரே
பிழைத்தது ஒறுக்கிற் பவர்? |
 |
|
10. |
புரந்தார்கண்
நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடு
இரந்துகோள் தக்கது உடைத்து. |
 |
|
|
திருக்குறள்
- தொகுப்பு |