|
80.
நட்பாராய்தல் -
திருக்குறள்
|
|
| 1. |
நாடாது நட்டலின் கேடுஇல்லை: நட்டபின்
வீடுஇல்லை நட்பாள் பவர்க்கு. |
 |
|
2. |
ஆய்ந்துஆய்ந்து
கொள்ளாதான் கேண்மை கடைமுறை
தான்சாம் துயரம் தரும். |
 |
|
3. |
குணனும் குடிமையும் குற்றமும் குன்றா
இனனும் அறிந்தியாக்க நட்பு. |
 |
|
4. |
குடிப்பிறந்து
தன்கண் பழிநாணு வானைக்
கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு. |
 |
|
5. |
அழச்சொல்லி அல்லது இடித்து வழக்குஅறிய
வல்லார்நட்பு ஆய்ந்து கொளல். |
 |
|
6. |
கேட்டினும்
உண்டுஓர் உறுதி கிளைஞரை
நீட்டி அளப்பதோர் கோல். |
 |
|
7. |
ஊதியம் என்பது ஒருவற்குப் பேதையார்
கேண்மை ஒரீஇ விடல். |
 |
|
8. |
உள்ளற்க உள்ளம்
சிறுகுவ: கொள்ளற்க
அல்லல்கண் ஆற்றுஅறுப்பார் நட்பு. |
 |
|
9. |
கெடுங்காலைக்
கைவிடுவார் கேண்மை அடுங்காலை
உள்ளினும் உள்ளம் சுடும். |
 |
|
10. |
மருவுக
மாசற்றார் கேண்மை:ஒன்று ஈத்தும்
ஒருவுக ஒப்பிலார் நட்பு. |
 |
|
|
திருக்குறள்
- தொகுப்பு |