|
87.
பகைமாட்சி -
திருக்குறள்
|
|
| 1. |
வலியார்க்கு மாறுஏற்றல் ஓம்புக: ஓம்பா
மெலியார்மேல் மேக பகை. |
 |
|
2. |
அன்புஇலன் ஆன்ற
துணைஇலன் தான்துவ்வான்
என்பரியும் ஏதிலான் துப்பு? |
 |
|
3. |
அஞ்சும் அறியான் அமைவுஇலன் ஈகலான்
தஞ்சம் எளியன் பகைக்கு. |
 |
|
4. |
நீங்கான் வெகுளி
நிறைஇலன் எஞ்ஞான்றும்
யாங்கணும் யார்க்கும் எளிது. |
 |
|
5. |
வழிநோக்கான் வாய்ப்பன செய்யான் பழிநோக்கான்
பண்புஇலன் பற்றார்க்கு இனிது. |
 |
|
6. |
காணாச்
சினத்தான் கழிபெருங் காமத்தான்
பேணாமை பேணப் படும். |
 |
|
7. |
கொடுத்தும் கொளல்வேண்டும் மன்ற அடுத்துஇருந்து
மாணாத செய்வான் பகை. |
 |
|
8. |
குணன்இலனாய்க்
குற்றம் பலஆயின் மாற்றார்க்கு
இனன்இலன்ஆம் ஏமாப்பு உடைத்து. |
 |
|
9. |
செறுவார்க்குச்
சேண்இகவா இன்பம் அறிவுஇலா
அஞ்சும் பகைவர்ப் பெறின். |
 |
|
10. |
கல்லான்
வெகுளும் சிறுபொருள் எஞ்ஞான்றும்
ஒல்லானை ஒல்லாது ஔத. |
 |
|
|
திருக்குறள்
- தொகுப்பு |